உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும் மாடுகளை போற்றும் வகையில் பாரம்பரியமுறையிலான மாட்டுப்பொங்கல் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையில் உழவு, போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஒரு உற்றதுணையாக பயணிப்பவை மாடுகள். விவசாயிகள் தங்களது பெற்ற பிள்ளை செல்வங்களை பாதுகாப்பது போலவே மாடுகளையும் அன்றாடம் போற்றிப் பாதுகாத்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு முறை இன்னும் சீறும், சிறப்போடும் மாடுகளை வழிபடுவதற்காக பாரம்பரியமாக தை மாதத்தின் இரண்டாம் நாளன்று மாட்டுப் பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை முதல்நாள் பொங்கல் என்றாலும் கூட கிராம புறங்களில் மாட்டுப்பொங்கல்தான் அதிவிமர்சையாக கொண்டாப்படுவது வழக்கமாகும். மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வர்ணம் பூசி, புதுப்பானையில் பொங்கலிட்டு, மாடுகளை வழிபட்டு அவற்றுக்கு தித்திக்கும் பொங்கலை விவசாயிகள் புகட்டுவதும் வழக்கம்.







