மக்கள் எந்த திருடன் சிறந்த திருடன் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கின்றனர் என எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நூற்றாண்டு சிறப்பு கொண்ட தமிழ் சினிமாவில் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் மிக முக்கியமான சங்கம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக தேனாண்டாள் முரளி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் இன்று (ஏப்ரல் 30) காலை 9 மணிக்கு துவங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை அடையாறில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ள இந்தத் தேர்தல் மூலம் தலைவர், 2 துணைத் தலைவர், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதில், தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமியும், மற்றொரு அணியில் மன்னனும் போட்டியிடுகின்றனர். மேலும், இந்தத் தேர்தலுக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன் மற்றும் பாரதிதாசன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக பணியாற்றுகின்றனர்.
காலை 9 மணிக்கு தொடங்கி இதன் வாக்குப்பதிவு மாலை வரை நடைபெற உள்ளது. தொடர்ந்து, வாக்குகள் நாளை எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் வாக்களித்த பிறகு இயக்குநரும் , தயாரிப்பாளருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அளித்த பேட்டியில், ஏற்கனவே இருக்கும் தயாரிப்பாளர் அணி செயல்பாடுகள் மிகவும் மோசமாக இருப்பதன் காரணமாகத்தான் தற்போது வேறு அணி தேவை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னெல்லாம் அரசியல்வாதிகள் கொள்ளையடித்தனர் ஆனால் மாட்டிக் கொண்ட தற்போது டெக்னாலஜியின் வளர்ச்சி காரணமாக எப்படி கொள்ளையடிக்கின்றனர் என்ன கொள்ளையடிக்கின்றனர் என்பதே கண்டுபிடிக்க முடியவில்லை.
மக்களும் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை எந்த திருடன் சிறந்த திருடன் என்பதை தேர்ந்தெடுப்பதற்காக வாக்களிக்கின்றனர். இதுபோலத்தான் தற்போதைய அரசியல் நிலை. அதை போல தான் இந்த தயாரிப்பாளர் தேர்தலும் நடக்கிறது என தெரிவித்தார்.