முக்கியச் செய்திகள்தமிழகம்

பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் அமைக்க கூடாது – சீமான்

பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்க வேண்டாம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டிருக்கிறது. 81 கோடி செலவில் இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. அரசு தயாரித்துள்ள திட்ட அறிக்கையின்படி, இந்த நினைவுச் சின்னம் அமைக்கவுள்ள பகுதி கடலோர ஒழுங்காற்று மண்டலம் (CRZ IA), CRZ ll, CRZ IV-A ஆகிய பகுதிகளுக்குள் வருகிறது. இத்திட்டத்தை சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சில மீன்பிடி சங்கங்களும் எதிர்த்து வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதுகுறித்து, சிவகங்கையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கினைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடல் எங்கள் சொத்து எந்த கொம்பனும் கைவைக்க அனுமதிக்க முடியாது. பேனா நினைவு சின்னத்தை கடலுக்குள் அமைக்கக் கூடாது. அண்ணன் சேகர் பாபு பேசியது பழைய வசனம். அதிமுக உட்கட்சி பிரச்சினைகளுக்கு நான் கருத்து கூற முடியாது. இலங்கை அகதிகள் இந்தியா வருவதை தடுக்க ஒரே வழி தனி தமிழ் ஈழம் சோசியலிசமே அது கண்டிப்பாக மலரும் என்றார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!

Web Editor

ஆந்திராவின் புதிய தலைநகராக விசாகப்பட்டினம் அறிவிக்கப்பட்டதன் பின்னனி இது தான்…

Jayakarthi

நேற்றைய லீக் போட்டியில், இத்தாலி, சுவிட்சர்லாந்து அணிகள் அசத்தல் வெற்றி!

Vandhana

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading