கோவையில் பெண் ஓட்டுநர் இயக்கிய பேருந்தில் திடீரென பயணம் செய்த செய்த கனிமொழி அவருக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.
கோவையின் முதல் பெண் ஓட்டுநரான ஷர்மிளா இயக்கிய பேருந்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்பியுமான கனிமொழி பயணம் செய்தார். காந்திபுரத்தில் இருந்து பீளமேடு வரை சென்ற அவர், பயணிகளிடம் இயல்பாக பேசி குறைகளை கேட்டறிந்தார். மேலும் ஓட்டுநர் ஷர்மிளாவை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய கனிமொழி, கடிகாரம் ஒன்றையும் அவருக்கு பரிசு அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி கூறியதாவது:
“பொதுவாக ஆண்களும் பெண்களும் சமம் தான். பெண்கள் லாரி ஓட்டுவார்களா ,பஸ் ஓட்டுவார்களா என்ற அர்த்தமற்ற கேள்விகளை கேட்பார்கள்.அந்த வகையில் இந்த பெண் பேருந்து இயக்குவது பாராட்டுக்குரியது ,மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் அனைத்தையும் செய்ய முடியும் என்ற வகையில் இவர் பேருந்து ஓட்டுவது பாராட்டுக்குரியது.
ஏற்கனவே செல்போனில் பேசிய போது கோவை வந்தால் கண்டிப்பாக நீங்கள் இயக்கும் பேருந்தில் பயண்ம் செய்வேன என தெரிவித்திருந்தேன், அவருடன் பேருந்தில் பயணம் செய்தது மகிழ்ச்சியளிக்கிறது.
இன்று எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒரேதளத்தில் ஒன்றிணைவது முதல்படி. இது மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையில் நாடு காத்திருக்கிறது” என கனிமொழி தெரிவித்தார்.