சென்னை சைதாப்பேட்டை பெட்ரோல் பங்க் மேற்கூரை சரிந்து விழுந்த சம்பவத்தில் அந்த பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதன் காரணமாக இரவு 7 மணியளவில் சைதாப்பேட்டை கிழக்கு ஜோன்ஸ் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது. அப்போது மழைக்காக அங்கு ஒதுங்கி நின்று வாகன ஓட்டிகள் சிலர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து சைதாப்பேட்டை, எழும்பூா், அசோக் நகா், தியாகராய நகா் ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், பொக்லைன் இயந்திரம் மூலம் மேற்கூரையை அகற்றி, அதில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. .
இடிபாடுகளிடையே சிக்கியிருந்த பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா் மதுராந்தகத்தைச் சோ்ந்த கந்தசாமி, மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். 8 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேற்கூரை சரிந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோக்குமார், மேலாளர் வினோத் ஆகியோர் 304வது சட்டப்பிரிவின் இன்படி (மரணத்தை விளைவிக்கும் வகையில் அஜாக்கிரதையாகச் செயல்படுதல்) கீழ் சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விபத்து தொடர்பாக இந்தியன் ஆயில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அந்த பெட்ரோல் நிலையத்திற்கு சீல் வைத்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.