சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் ஒரே நாளில் நேர்காணல் நடைபெற்றது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில், விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர், முன்னிலையில் 9 பேர் கொண்ட குழுவினர், நேர்காணலை நடத்தினர். அதிமுகவில் மொத்தம் 7,967 பேர் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேர்காணலின் போது பேசிய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒரு தொகுதிக்கு பலர் விண்ணப்பித்திருந்தாலும் ஒருவரை மட்டுமே தேர்வு செய்ய இயலும் எனவும், கட்சி தலைமை அறிவிக்கும் வேட்பாளரை மற்ற அனைவரும் முழு மனதோடு ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் பேசினார். இதைத்தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு தகுதியில்லை என அர்த்தமில்லை என்றும் அனைவருக்கும் எதிர்வரும் காலங்களில் வாய்ப்பு இருக்கிறது என கூறினார்.