திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் இருந்து இன்று முதல் 26-ம் தேதி வரை திருப்பதிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளாது.
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
“2023-ல் திருப்பதி திருமலையில் 2-வது முறையாக நடைபெறவுள்ள பிரம்மோற்சவம் திருவிழாவினை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி., தஞ்சாவூர், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு 13-10-2023 (இன்று) முதல் 26-10-2023 வரை சிறப்பு பேருந்துகள் இயக்க உள்ளன.
மேற்கூறிய இடங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளுக்கு முன்பதிவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
இந்த சே வையை பக்தர்கள் முழுமையாக பயன்படுத்தி பயணம் மேற்கொள்ள www.tnstc.in & tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.