1500 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் ஓஎல்எக்ஸ் நிறுவனம்

பழைய பொருட்களின் விற்பனை  செய்யும் சேவையை வழங்கி வரும் ஓஎல்எக்ஸ் நிறுவனம், 1500 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள்…

பழைய பொருட்களின் விற்பனை  செய்யும் சேவையை வழங்கி வரும் ஓஎல்எக்ஸ் நிறுவனம், 1500 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதாக பொருளாதார அறிஞர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் உலகளவில் முன்னணி நிறுவனங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, அமேசான், ட்விட்டர், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை சமீபத்தில் அறிவித்தது. அமேசான் நிறுவனம் 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய உடன் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது நிறுவனத்தில் 5% சதவீத ஊழியர்களை அதாவது 10,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனமும் 12,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. கடந்த சில தினங்களுக்கு முன் மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான ஸ்பாடிபை நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்தது.

தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் பணிநீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. இந்நிலையில், பழைய பொருட்களை விற்பனை செய்யவும் வாங்கவும் பயன்படும் தளமான ஓஎல்எக்ஸ் நிறுவனம் தனது ஊழியர்களில் 15 சதவீதம் பேரை நீக்க முடிவு செய்துள்ளது. அதாவது சர்வதேச ஊழியர்களில் 1500 பேரை நீக்க முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்து தொழில் பிரிவுகளிலும் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளோம். சர்வதேச அளவில் பொருளாதார உள்ள சூழல் காரணமாக நிறுவனத்தின் செலவை குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி 15 சதவீத ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளோம். இது எங்களுக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. அவர்களிடம் நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.