சென்னையில் நடைபெற்ற பழங்கால கார் கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர்.
சென்னை கந்தன்சாவடி அருகே தனியார் நட்சத்திர ஹோட்டலில் வின்டேஜ் கார்கள் மற்றும் விண்டேஜ் பைக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. ரோல்ஸ் ராய்ஸ், பென்ஸ், ஜாகுவார் என்ன பழமை வாய்ந்த கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இதில் இடம் பெற்றுள்ளன.
சென்னை காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோர் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார் ஒவ்வொரு காரின் தனித்துவத்தை அவர் கேட்டறிந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பங்கேற்றார். கண்காட்சியை பலரும் ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.







