ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 25 முதல் தொடங்கும் என ஐசிசி அறிவித்துள்ளது.
ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 5ம் தேதி முதல் நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை மாற்றியமைக்கப்பட்டு ஐசிசி வெளியிட்டுள்ள நிலையில் டிக்கெட் விற்பனைக்கான தேதியை அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி http://www.icc-cricket.com என்ற இணையதளத்தில் அக்டோபர் 15ஆம் தேதி முதல் டிக்கெட் வாங்குவதற்கான பதிவு தொடங்கும் என்றும் அக்டோபர் 25ம் தேதி முதல் பதிவு செய்தவர்களுக்கான டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி இந்தியா பங்கேற்காத மற்ற அணிகளுக்கான பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் இந்திய அணி விளையாடும் 2 பயிற்சி போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என தெரிவித்துள்ளது.
அக்டோபர் 8ம் தேதி சென்னையில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என ஐசிசி அறிவித்துள்ளது. இதேபோல் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மற்றும் இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் கூறப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து, இந்தியா – நியூசிலாந்து, இந்தியா – இலங்கை அணிகள் மோதும் போட்டிக்களுக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 1ம் தேதி நடைபெறும். அகமதாபாத்தில் அக்டோபர் 14ம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 3ம் தேதி நடைபெறும்.
இந்தியா – தென் ஆப்பிரிக்கா, இந்தியா – நெதர்லாந்து அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 2ம் தேதி தொடங்கும் என அறிவித்துள்ளது- அரையிறுதி போட்டிகள் மற்று இறுதிப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை செப்டம்பர் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விலை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது