தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கு, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவித்துள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பார்த்தசாரதி 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி பதவி ஏற்றார். அதனைத்தொடர்ந்து கடந்த 2-ம் தேதி துணைவேந்தரின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அவர் பணி ஓய்வு பெற்றார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்பின் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தரை தேர்வு செய்ய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணை வேந்தர் பிச்சுமணி , முன்னாள் துணை வேந்தர் ராஜேந்திரன், ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி கருத்தையா பாண்டியன் ஆகியோர் தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது.
இந்து குழுவினரே திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு தற்போது அறிவித்துள்ளது. துணைவேந்தர் பதவிக்கு தகுதியானவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் 20-ம் தேதிக்குள் http://www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தேடல் குழு தெரிவித்துள்ளது. தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பதவி முடிவடைந்ததைத் தொடர்ந்து, உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் ஆட்சிமன்றக்குழு கூட்டம் நடைபெற்று, பல்கலைக்கழகத்தை நிர்வாகம் செய்யக் குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
– இரா.நம்பிராஜன்