ஆதிச்சநல்லூர் ஆன்சைட் அருங்காட்சியகம் அமைப்பதற்கான போதுமான நிதியை மத்திய அரசு வழங்கும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அடிக்கல் நாட்டினார். விழாவில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:
“பாரத கலாச்சரததை பாதுகாக்க பிரதமர் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் என அறிவித்தோம். உலகத்திலேயே மிக பழமையான பகுதி தொடர்ந்து வாழ்ந்து வருபவர்களின் கலாச்சாரத்தை அகழாய்வு மூலம் வெளிக்கொண்டு வருகிறோம்.
3,4 காலகட்டங்களாக ஆராய்ச்சி நடைபெற்றுள்ளது. இங்கிருந்து பல நாடுகளுக்கு வணிகம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மேலும் மனிதர்களை புதைத்த இடங்களும் இங்கு உள்ளது. அவர்கள் உபயோகப்படுத்திய பொருட்களும் வைக்கப்பட்டுள்ளது. 3,500 ஆண்டுகளுக்கு முன்னதாக நெல்லும், திணையும் உபயோகப்படுத்திய பொருட்களை நமது தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்
அலெக்சாண்டர் ரியா காலத்தில் இருந்து தற்போது வரை அகழாய்வு மேற்கொண்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தி மக்கள் அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அலெக்சாண்டர் ரீயா காலத்தில் அகழாய்வு மேற்கொண்ட பொருட்களை பெர்லின் போன்ற வெளிநாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர் அதனையும் இந்தியாவிற்கு கொண்டுவந்து ஆதிச்சநல்லூரில் காட்சிப்படுத்தப்படும். ஆதிச்சநல்லூரில் அமைக்கப்படும் ஆன்சைட் அருங்காட்சியகத்திற்கு எந்த தடையும் இன்றி போதுமான நிதியை மத்திய அரசு அளிக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.