34.4 C
Chennai
May 14, 2024
தமிழகம் செய்திகள்

உதகை தாவரவியல் பூங்காவில் தொடரும் ஊழியர்கள் போராட்டம்!

நீலகிரி மாவட்டம், தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்கா மற்றும்
அரசு பண்ணைகளில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து 10- ஆம் நாளாக
போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க நாள்தோறும்
ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா
பயணிகளை மகிழ்விக்க பூங்காக்களை தயார் படுத்தும் பணியில், நிரந்தர மற்றும்
தற்காலிக பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து
வருகின்றனர். இவர்கள் தினக்கூலியாக 400 ரூபாய் மட்டுமே பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் , 480 நாட்கள் முதல் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவரை பணி
நிரந்தரம் செய்ய வேண்டும். சிறப்பு காலவரை தொகுப்பு ஊதியத்தை வழங்க வேண்டும்,
அரசாணைபடி அறிவித்த நாள் ஒன்றுக்கு 700 ரூபாய் அடிப்படையில் ஊதியம் வழங்க
வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 500 க்கும் மேற்பட்ட பூங்கா மற்றும் பண்ணை ஊழியர்கள் , தாவரவியல் பூங்காவில் 10வது நாளாக உள்ளிருப்பு மற்றும் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மேலும், தமிழக அரசும், தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கடந்த 9வது நாளாக எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து, பிச்சை எடுக்கும் போராட்டத்தில் பூங்கா ஊழியர்கள் ஈடுபட்டனர்.

—கு.பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading