நியாயமான முறையில் தேர்தலை நடத்தக்கோரி கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட 9 சட்டமன்ற உறுப்பினர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
தமிழ்நாடு முழுவதும் நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் நியாயமான முறையில் தேர்தல் நடத்தக்கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, திடீரென ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மேலும் 8 அதிமுக எம்.எல்.ஏ.க்களும் தர்ணா போராட்டம் நடத்தினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது காவல்துறையினர் அதிமுகவினரை பொய்வழக்கில் கைது செய்வதாகவும், துணை ராணுவத்தை வரவழைக்க கோரியும் முழக்கங்கள் எழுப்பினர். பின் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினார். காவல்துறையினர் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றஞ்சாட்டிய எஸ்.பி. வேலுமணி, தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவப்படையினரை வரவழைக்க வேண்டும் என்றும் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.