திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் செய்யப்பட்டனர். இந்த நிலையில் அடுத்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயாரகிவிட்டதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக ஆட்சிக்கு வந்தபின்னர் அமைச்சர்களின் கைகளை விட ஐஏஎஸ் அதிகாரிகளின் கைகளே ஓங்கி இருப்பதாக மூத்த அமைச்சர்கள் முதலமைச்சரிடம் புகார் வாசித்துள்ளனர். அதனை பொறுமையாக கேட்ட முதலமைச்சர், இதுதொடர்பாக புள்ளிவிபரங்களுடன் பைலை அனுப்புங்கள். பார்க்கலாம் எனக் கூறியதாக தெரிகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன் அடிப்படையில், ஒவ்வொருதுறை அதிகாரிகள் செயல்பாடுகள் குறித்து நேர்மைக்கு பெயர் பெற்ற அமைச்சரின் கையில் அந்த பொறுப்பினை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
பொதுப்பணித்துறை, பத்திரபதிவுத்துறை, கால்நடை, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை, தகவல்தொழிற்நுட்பத்துறை, எல்காட், கல்வித்துறை மற்றும் சிஎம்டிஏ, சென்னை மாநகராட்சி என பல்வேறு துறையில் அதிகாரிகள் அமைச்சர்களின் உத்தரவை மதிப்பதில்லை என அந்த முக்கிய அமைச்சரிடம் மற்ற அமைச்சரவை சகாக்கள் புகார் வாசித்துள்ளனர். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட அவர், எந்தெந்த அதிகாரிகளால் என்னென்ன பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்ற தகவலையும் கேட்டு பெற்றுள்ளார். அதன் அடிப்படையில் விரைவில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் டிரான்ஸ்பர் இருக்கும் எனத் தெரிகிறது.
இதன் அடிப்படையில் பல்வேறு துறை செயலாளர்கள் மாற்றப்படலாம் கோட்டை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு அறிவித்துள்ள திட்டங்களை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட வாய்ப்பு எனத் தகவல்.
இந்த டிரான்ஸ்பர் லிஸ்ட் தயாராகிவிட்டதாகவும், விரைவில் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
எழில்