திருப்பூரில் போதைப்பொருளுக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் போதை பொருளுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் நடைபெற்றது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மேற்கு மண்டல போதை எதிர்ப்பு
மாநாடானது வரும் 26- ந் தேதி திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்
நடைபெறவிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த மாநாட்டை முன்னிட்டு, போதை பொருளுக்கு எதிராக திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய நடை பயணம் திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது. இதில் மாதர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டதோடு மதுகடைகளுக்கும்,போதை பொருட்களுக்கு எதிரக எழுதப்பட்ட பாதாகைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பியவாறு நடைபயணம் மேற்கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரெ. வீரம்மாதேவி