நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அதற்கு தேவையான பல்வேறு முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்களோடு நேற்று ஆலோசனை நடைபெற்ற நிலையில், இன்று சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையத்தில், தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆலோசனையின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்துவது, பணப்பட்டுவாடாவை தடுப்பது, பறக்கும் படை சோதனைகளை முறையாக கண்காணித்தல் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பழனிக்குமார் வழங்கினார்.
அண்மைச் செய்தி: வார நாட்களில் காலை 5.30 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ இரயில் சேவை
வேட்புமனு பரிசீலனையில் எந்தவித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலையோடு தேர்தல் அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவுறுத்தினார். மேலும், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளர்கள் எளிதில் வந்து வாக்களிக்கும் வகையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.