’எ.வ.வேலு பற்றி மோடி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’ -மக்களவை சபாநாயகருக்கு டி.ஆர்.பாலு கடிதம்!

தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். நம்பிக்கையில்லா தீர்மானத்தின்…

தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான பதிலுரையின் போது, நேற்று பிரதமர் மோடி தமிழக அமைச்சரை விமர்சனம் செய்தார். மேலும், தமிழகம் குறித்த பல்வேறு விஷயங்களை மோடி பேசினார்.

 

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் எனக்கோரி திமுக நாடாளுமன்ற கட்சித் தலைவர் டிஆர்.பாலு சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதி உள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
”மக்களவையில் 9.8.2023 மற்றும் 10.8.2023 ஆகிய தேதிகளில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் பதிலின் போது, ​பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் பிரதமர் நரேந்தி மோடி ஆகியோர் கடந்த 5.8.2023 அன்று சென்னை அண்ணாசாலை மாவட்ட அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலுவின் உரையை தவறாக மேற்கோள் காட்டியுள்ளார். எனவே, தமிழ்நாடு அமைச்சர் எ.வ.வேலு குறித்து பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோர் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.