34.4 C
Chennai
September 28, 2023
முக்கியச் செய்திகள் தமிழகம்

மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்ட எண்ணத்தில் செயல்படுகிறார்- சரத்குமார்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போதே முதல்வராகி விட்டதை போன்ற எண்ணத்தில் செயல்படுவதாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச் செயலாளரும் நடிகருமான சரத்குமார் மற்றும் கட்சியின் மாநில மகளிரணி செயலாளர் ராதிகா ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நடிகர் சரத்குமார் பேசியதாவது, ஓட்டுக்கு பணம் பெற்று கொண்டு வாக்களிப்பது ஜனநாயக படுகொலை என சாடினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அமெரிக்க தேர்தலை போன்று பொதுமக்கள் முன்னிலையில் தலைவர்கள் விவாதம் செய்தால் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கலாம் என சரத்குமார் யோசனை தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சேருவதற்கான வாய்ப்பில்லை என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Leave a Reply