வறுமை காரணமாக 3 வருடங்களாக வீடு இன்றி, கழிவறையில் வசித்து வந்த வயதான தம்பதியினருக்கு, மு.க.அழகிரி தனது ஆதரவாளர்கள் மூலம் உதவி செய்துள்ளார்.
மதுரை மேலூர் அருகே பெரிச்சான்குடிபட்டியில், சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வுபெற்ற வெள்ளைச்சாமி, மனைவியுடன், குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, கஜா புயல் காரணமாக அவர்களின் குடிசை வீடு சேதமடைந்தது. அன்று முதல் அரசால் கட்டி தரப்பட்ட தனிநபர் கழிப்பறையை, தங்களது வசிப்பிடமாக மாற்றி வாழ்ந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்த, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, தனது ஆதரவாளரான துரை ராஜேந்திரன் மூலம், வயதான தம்பதியினருக்கு நிதியுதவி அளித்து, நிவாரணப் பொருட்களையும் வழங்கினார்.







