பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் மற்றும் கே.கே.எஸ்.எஸ். ஆர் ராமசந்திரன் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் அவரது திருவுருப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
விருதுநகரில் பெருந்தலைவர் கல்விதந்தை காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாள் விழாவை அரசு சார்பாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறது. ஒவ்வொரு வருடமும் விருதுநகரில் உள்ள காமராஜர் பிறந்த வீடான அவரது நினைவிடத்திற்கு சென்று அரசு அதிகாரிகள் மரியாதை செய்வதும் வழக்கம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனடிப்படையில் இன்று அவரது இல்லத்திற்கு சென்ற மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அங்குள்ள காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார் ஆகியோர் காமராஜரின் உருவபடத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி காமராஜரின் நினைவு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை பார்வையிட்டனர்.
இந்நிலையில், காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு விருதுநகரில் அமைந்துள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு தமிழ்நாடு அரசு துறை சார்பில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே எஸ்.எஸ். ஆர் ராமச்சந்திரன் மற்றும் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.