சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அன்றும் இயங்கும்!

மே மாதத்தில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ…

மே மாதத்தில் முழு ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை அன்றும் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மெட்ரோ ரயில் நிறுவனம், ஊரடங்கு நாட்களிலும் மெட்ரோ ரயில் சேவை இருக்கும் என அறிவித்துள்ளது. அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ரயில்சேவை இருக்கும் என தெரிவித்துள்ள மெட்ரோ நிறுவனம், விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 1 மணிநேரத்திற்கு ஒருமுறையும், மத்திய இரயில் நிலையம் – விமான நிலையம் இடையே கோயம்பேடு வழியாக 2 மணி நேரத்திற்கு ஒருமுறையும் இயக்கப்படும் என அறிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.