நீட் விலக்குக் கோரும் மசோதா சட்ட முன் வடிவை நிறைவேற்ற இன்று சிறப்புச் சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படுகிறது. கெரோனா தொற்றால் கலைவானர் அரங்கில் கூடி வந்த சட்டப்பேரவை கூட்டம் மீண்டும் ஜார்ஜ் கோட்டையில் கூட்டப்படுகிறது.
கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மருத்துவ படிப்புக்கான நீட் விலக்கு மசோதா சட்ட மின்வடிவைச் சட்டப்பேரவையில் இயற்றி குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநரிடம் அனுப்பப்பட்டது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாமல் இருந்த நீட் விலக்கு மசோதாவை ,142 நாட்களுக்குப் பிறகு தமிழ் நாடு சட்டப்பேரவைத் தலைவருக்கு , ஆளுநர் ஆர். என். ரவி திருப்பி அனுப்பினார். நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அதிமுக, பாஜக மற்றும் புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தன.

அனைத்து தரப்பு கோரிக்கைகளை ஆராய்ந்து மறுபடியும் நீட் விலக்கு மசோதா இயற்றி ஆளுநருக்கு அனுப்பத் தமிழ அரசு முடிவு செய்திருந்த நிலையில் . அதற்கான சிறப்புச் சட்டப் பேரவை கூட்டம் இன்று கூட்டப்படுகிறது. கொரோனா நோய்த்தொற்று காரணமாகக் கலைவானர் அரங்கில் நடத்தப்பட்டு வந்த கூட்டத் தொடர் இன்று மறுபடியும் ஜார்ஜ் கோட்டையில் கூட்டப்படுகிறது.
கலைவானர் அரங்கில் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு டேப் வழங்கப்பட்டிருந்தது, மேலும் அவர்களின் இருக்கையில் கணினி பொருத்தப்பட்டிருந்தது. தற்போது ஜார்ஜ் கோட்டையிலும் உறுப்பினர்கள் அமரும் இருக்கையில் கணினி பொருத்தப்பட்டுள்ளது. இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரும் நேரலையில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நான்கு முறை சிறப்பு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.








