நாட்டில் நிலவும் அரசியல் சூழல்கள் குறித்து விவாதிப்பதற்காக பாஜக அல்லாத முதலமைச்சர்களின் கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளதாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அடுத்தடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்புகொண்ட மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பாஜக அல்லாத மாநிலங்களில் ஆளுநரின் அதிகாரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாகக் கூறியதுடன், பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு குறித்தும் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார். இந்நிலையில், பாஜக அல்லாத முதலமைச்சர்கள் மாநாடு மும்பையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது தொடர்பாக சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், “நாட்டில் நிலவி வரும் அரசியல் சூழல் குறித்து விவாதிக்க, பாஜக அல்லாத முதல்வர்கள் கூட்டம் மும்பையில் விரைவில் நடைபெறும். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம், மத்திய புலனாய்வு அமைப்புகளை தவறாக பயன்படுத்துவது, வகுப்புவாத மோதலை தூண்டும் முயற்சிகள் போன்ற பிரச்சினைகள் குறித்து அந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் சஞ்சய் ராவத் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.கஸ்டாலினும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் இந்த கூட்டத்துக்கான நாள் இறுதி செய்யப்படவில்லை.