சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசம் கேட்டு இரு
தரப்பினர் மோதிக்கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
23-ம் புலிகேசி படத்தில் வடிவேலு கூறும் “ஒரு புறாவுக்கு போரா” என்ற பேமஸ் டயலாக் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும். இந்த படத்தில் வரும் காட்சி போலவே மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் மற்றும் பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாகச் சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்று இரு தரப்பையும் சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்களுக்கு நடந்த விருந்தில் பாயாசம் பரிமாறியுள்ளனர்.
அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனைப் பெண் வீட்டார் தட்டி கேட்டு,தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாம்பாரைப் பெண் வீட்டார் மீது ஊற்றியதாகா கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினரும் கைகலப்பாகி மோதல் ஏற்பட்டதாம் .
இதனால் திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள்,
சேர் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. மண்டப வாசலில் இரு
தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுகுறித்து சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சமாதான செய்து இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.







