அண்ணாமலை தலைமையில் திருமண விழா; அதிமுக பிரமுகரைக் கட்சியிலிருந்து நீக்கி இபிஎஸ் அதிரடி!

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக பிரமுகரைக் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலாளர் முரளி என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு 39…

அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய அதிமுக பிரமுகரைக் கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட புரட்சி தலைவி பேரவை செயலாளர் முரளி என்பவர் அண்ணாமலையின் பிறந்தநாளை முன்னிட்டு 39 ஜோடிகளுக்கு திருமணம் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த திருமணம் நிகழ்ச்சி பாஜக அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது.

 

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வைத்து திருமண விழாவை நடத்திய விழுப்புரம் மாவட்ட புரட்சித் தலைவி பேரவை செயலாளர் முரளியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி,  எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ” கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும். கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும்.

கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், சுழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு. S. முரளி (எ) ரகுராமன், இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என அறிக்கை வெளியிட்டுள்ளார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.