பெண் பத்திரிகையாளரை ஒருவர் தகாத முறையில் தொடும் வீடியோ வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் ஒரு ஆண் பெண் பத்திரிகையாளரை தகாத முறையில் தொடுவதைக் காணலாம். இந்த வீடியோவுக்கு சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும், இதை செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் ஸ்பெயினின் மாட்ரிட்டில் செவ்வாய்கிழமை (செப்டம்பர் 12) நடந்தது. பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட நபர் கைது செய்யப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. பத்திரிக்கையாளர் இசா பலாடோ மாட்ரிட்டில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தை நேரலையில் அறிக்கை செய்து கொண்டிருந்த போது, ஒரு நபர் அவரை அணுகினார். மேலும் தகாத முறையில் அவரை தொட ஆரம்பித்தது பெண் பத்திரிகையாளருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. வைரலான வீடியோவில், இந்த நபர் எவ்வாறு பெண்ணின் உடலில் பின்னால் இருந்து தனது கையை வைத்து, நீங்கள் எந்த சேனலுக்கு வேலை செய்கிறீர்கள் என்று கேட்டதைக் காணலாம்.
"Do you really have to touch my ass?”
Yesterday, journalist Isa Balado was in the middle of a live report in Madrid when a man approached her from behind & sexually assaulted her, grabbing her bottom
He was arrested soon after👇#MeToo #TimesUp #SeAcabópic.twitter.com/fZaS1gXGmo https://t.co/eGr8EtwfXS
— Stefan Simanowitz (@StefSimanowitz) September 13, 2023
இதைப் பார்த்து ஸ்டுடியோவில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் ஆச்சரியப்பட்டு, இஷாவிடம், “இடைமறித்ததற்கு என்னை மன்னியுங்கள். அவர் உங்களை தொட்டுவிட்டாரா?” என்று கேட்க, பெண் பத்திரிகையாளர் சங்கடமான சூழ்நிலையில் ஆம் என்கிறார். இதனால் கோபமடைந்த தொகுப்பாளர், தயவுசெய்து அந்த நபரை கேமராவில் என் முன் கொண்டு வாருங்கள் என கூறினார்.
இதற்குப் பிறகு பெண் நிருபர் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் நாங்கள் எந்த சேனலைச் சேர்ந்தவர்கள் என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்களா? என்னை தொட்டாயா? நான் நேரலையில் அறிக்கை செய்கிறேன் என்று கூறினார். ஆனால் அந்த நபர் தான் தவறு செய்யவில்லை என்று மறுக்கிறார். இருப்பினும், இந்த வீடியோ வைரலானதை அடுத்து, அவரை மாட்ரிட் போலீசார் கைது செய்தனர்.