உலகப்புகழ்பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை வைகையாற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் கொட்டகை முகூர்த்த கால் நடும் விழா சிறப்பு பூஜைகளுடன் நடைபெற்றது.
அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் 108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றாகும். அழகர்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை பெருந்திருவிழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். சித்திரை திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி பெருமாள் கோவிலின் சன்னதி முன்பாக கொட்டகை முகூர்த்த விழா நடைபெற்றது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் கோவில் மண்டப வளாகத்தில் யாழி திருமுகத்திற்கு முன்பாக நாணல் புல், மாவிலை, பூ மாலைகள், சந்தனம், தாம்பூலம், தேங்காய், பழங்கள் வைத்து நூபுர கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நடத்தப்பட்டு பட்டர்களின் வேத மந்திரங்கள் மற்றும் மேள தாளம் முழங்க நடைபெற்றது.
இதன் பின்னர் மங்கள இசையுடன், வர்ணம் பூசப்பட்ட முகூர்த்த கால்கள், மாவிலை, மாலைகளுடன் இணைக்கப்பட்டு கோவில் உள்பிரகாரம், மற்றும் வெளிப்புறம் உள்ள ராஜ கோபுரம் முன்பாகவும் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதைத் தொடர்ந்து பந்தல் அமைக்கும்
பணிகள் தொடங்கியது. சுந்தரராஜ பெருமாள் மே 3 ஆம் தேதி இரவு 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரையை நோக்கி புறப்படுகிறார். மே 4 ஆம் தேதி காலை 6 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகின்றது.
சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்
நிகழ்வு மே 5 ஆம் தேதி காலை 5.45 மணி முதல் 6.12 மணிக்குள் நடைபெறுகிறது,
கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு
காட்சி அளிக்கிறார்.
இதன் பின்னர் இராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மே 6 ஆம் தேதி காலை 9 மணிக்கு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் சேஷ வாகனத்தில் கள்ளழகர் புறப்படுகிறார். மே 6 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர்
மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கிறார்.
மே 6 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் விடிய விடிய இராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மே 7 ஆம் தேதி காலை 6 மணிக்கு கள்ளழகர் மோகினி அவதாரத்தில் காட்சி அளிக்கிறார். மே 7 ஆம் தேதி பகல் 2 மணிக்கு கள்ளழகர் இராஜாங்க அலங்காரத்துடன் அனந்தராயர் பல்லகில் புறப்படுகிறார். மே 8 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு இராமநாதபுரம் மன்னர் சேதபதி மண்டபத்தில் கள்ளழகர் பூப்பல்லக்கில் அழகர்கோயில் நோக்கி புறப்படுகிறார். மே 9 ஆம் தேதி காலை 10.32 மணிக்கு கள்ளழகர் அழகர்கோயிலுக்கு வந்தடைகிறார்