நடிகர் விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
நடிகர் விஜய், கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு வணிக வரித்துறை நுழைவு வரி விதித்தது. இதை எதிர்த்தும், வரி விதிக்கத் தடை கோரியும் நடிகர் விஜய் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நடிகர்கள் நிஜ வாழ்விலும் ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது. வரி செலுத்துவது நன்கொடை போன்றது அல்ல, நாட்டிற்கு குடிமகன்கள் செய்ய வேண்டிய கட்டாய பங்களிப்பு. சமூக நீதிக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் நடிகர்கள் வரி ஏய்ப்பு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்த அவர், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்தார்.
இந்நிலையில், ரூ.1 லட்சம் அபராதம் விதித்தை எதிர்த்து விஜய் மேல் முறையீடு செய்துள்ளார். தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த தீர்ப்பின் நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு பட்டியலிடக் கோரியும் விஜய் அந்த மேல்முறையீட்டில் கூறியுள்ளார்.
அதேபோல தீர்ப்பில் தன்னை பற்றி நீதிபதி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் விஜய் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில், விஜயின் மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, முகமது சபீக் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இதில் இறக்குமதி காருக்கு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் தனி நீதிபதி தெரிவித்த கருத்துகள் தன்னை தனிப்பட்ட முறையில் புண்படுத்தியுள்ளது என்றும் தன்னை குற்றவாளி போல காட்டியுள்ளது விஜய் தரப்பில் வாதாடப்பட்டது.
அதேபோல ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நிலுவை வரித்தொகையான ரூ.32.30 லட்சம் தொகையை ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்திவிட்டோம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விஜய் குறித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தெரிவித்த எதிர்மறை கருத்துக்களை நீக்கி நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.