ஐபிஎல் 2023 கிரிக்கெட் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் போட்டிகளில் வெற்றி பெற தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், நேற்று இரவு பெங்களூருவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை எதிர்கொண்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக விராட் கோலி 61 ரன்களும், கேப்டன் டூ பிளஸ்சிஸ் 79 ரன்களும், மேக்ஸ்வெல் 59 ரன்களும் குவித்தனர்.
இதையும் படியுங்கள் : இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளுக்கு தேசிய கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம்
இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 65 ரன்களும், நிகோலஸ் பூரன் 62 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது.