‘எனது கேரியரின் கடைசிக் கட்டம்’ அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தோனி கூறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி (எம்எஸ்டி) கிரிக்கெட்டில் இருந்து விரைவில் ஓய்வு பெறலாம் என்று சூசகமாக தெரிவித்துள்ளார், “இது எனது வாழ்க்கையின் கடைசி கட்டம்” என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நேற்று இரவு எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்த பிறகு பேட்டியளித்த தோனி இதை தெரிவித்தார்.
மேலும் சக கிரிக்கெட் வீரர் ரசிகர்களின் ஆதரவுக்கு தனது நன்றியையும் தெரிவித்தார். அத்துடன் கடந்த இரண்டு சீசன்களில் இருந்து தற்போதைய ஐபிஎல் சீசன் மிகவும் வித்தியாசமானது என்று அவர் குறிப்பிட்டார்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ரசிகர்கள் ஸ்டேடியத்தில் வந்து ஆட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இங்கு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மக்கள் எங்களுக்கு நிறைய அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர்,” என்று எம்.எஸ். தோனி கூறினார்.