எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள் உள்ளனர் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசியுள்ளார்.
சேலத்தில், பாஜக மாநில துணைத் தலைவர் கேபி.இராமலிங்கம் இல்லத் திருமண விழாவில் பங்கேற்றபின், மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில்,
இந்தியாவில் கடந்த எட்டு ஆண்டுகளில் எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளோம். 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு கழிப்பிட தேவை குறித்து பேசுவது தயக்கமாகவே இருந்தது. பாஜக ஆட்சியில் அனைத்து பள்ளிகளுக்கும், ஏழை மக்களின் வீடுகளுக்கும் கழிப்பிடம் கட்டிக் கொடுத்திருக்கிறோம்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று சொன்னோம். அது
தற்போது நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் மக்களுக்கு அர்ப்பணிப்போம். பாஜகவின் அடிப்படை கொள்கைகளை நிறைவேற்றி உள்ளோம். ஆனால், தமிழகத்தில் நகைக் கடன் தள்ளுபடி என்று சொல்லி, அதற்கு பல்வேறு விதிமுறைகளை
கூறி தள்ளிவைத்துள்ளனர். விதிமுறைகளால் மக்கள் சிரமத்திற்குள்ளாகி
வருகின்றனர். திமுக மக்களை ஏமாற்றுவதற்காக தவறான தேர்தல் அறிக்கையை தந்துள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வதற்கு தவறிவிட்டார்கள். அதை நிறைவேற்றுவதற்கு திமுக முன்வர வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்தாலே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. பாலியல் குற்றங்கள், கொலைகள் அதிகரித்துள்ளது. மக்கள் வேதனையில் உள்ளனர். எதற்கு திமுகவிற்கு ஓட்டுப் போட்டோம் என்ற வேதனையில் மக்கள் உள்ளனர்.
மத்திய அரசின் ஒவ்வொரு திட்டங்களுக்கும் அதிக பயனிகள் தமிழகத்தில் தான்
உள்ளனர். எக்பிரஸ் சாலைகளால் சிறிய சிறிய ஊர்கள்கூட விமான நிலையங்களுடன்
இணைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ள 5 மீன்பிடி
துறைமுகங்களில் சர்வதேச தரம் கொண்டதாக மாற்றுவதில், சென்னை காசிமேடு
துறைமுகமும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. ஆளுநர் குறித்து திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்று விளம்பரத்திற்காகப் பேசி வருகின்றனர் என்றார்.
-ம.பவித்ரா