காஞ்சிபுரத்தை சேர்ந்த ரவுடி படப்பை குணா குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் என்கின்ற குணா. கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்த அவர், படப்பை குணா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு பிரபலமானார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் அடிதடி, தொழிற்சாலைகள், நிறுவனங்களை மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
மேலும், குணா மீது காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்தன. எனவே, போலீசார் தேடி வந்த நிலையில் கடந்த மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
அதே நேரத்தில், நன்னடத்தை விதியை மீறியதாக படப்பை குணா மீது ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியரும் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து படப்பை குணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் பரிந்துரைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.