15வது ஐபிஎல்-ன் இன்றைய, 14-வது போட்டியில்கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.
15-வது ஐபிஎல்-ன் 14-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன.
இதற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 10 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது, அதில் 23 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதேபோல, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதியது அதில் 9 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. அதனைத்தொடர்ந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் மோதியது. அதில் 4 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 3 விக்கெட்டுகள் எடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிப்பெற்றது. மேலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் மோதியது. அதில் 33 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் எடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிப்பெற்றது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. இதனால், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட்டுகளுக்கு 161 ரன்களை எடுத்தது. அதனைத்தொடர்ந்து, 162 ரன்களை இலக்காக கொண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பேட்டிங் செய்தது, 16 ஓவர்கள் முடிவில், 162 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








