களக்காட்டில் மண்ணுளி பாம்புடன் கைதானவர்களுக்கு வெளிமாநில
கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக, வனத்துறையினர் விசாரணையில்
தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை தலை பாம்பு என்றழைக்கப்படும் மண்ணுளி பாம்பில் மருத்துவ குணங்கள்
நிறைந்துள்ளதாக கூறி, அதனை சிலர் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்து
வருகின்றனர். இந்நிலையில், நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் ஒரு கும்பல்
மண்ணுளி பாம்பை பதுக்கி வைத்திருப்பதாக, களக்காடு வனத்துறையினருக்கு
ரகசிய தகவல் வந்தது.
தொடர்ந்து, களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குநர் ரமேஷ்வரன் உத்தரவின்பேரில் வனசரகர் பிரபாகரன், வனவர் ஸ்டாலின் ஜெயக்குமார் மற்றும் வனத்துறை
ஊழியர்கள் களக்காட்டில் உள்ள தங்கும் விடுதிகள், பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது களக்காடு-சேரன்
மகாதேவி சாலையில் நின்ற ஒரு காரில், சிலர் சந்தேகத்திடமான முறையில் பேசி
கொண்டு இருந்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அவர்களிடம்வனத்துறையினர் விசாரணை நடத்தியதில் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. வனத்துறையினரிடம் சிக்கியவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்த சேர்ந்த தனீஸ், கேரளா மாநிலம் சன்னி, கீழக்கருவேலங்குளம் முத்துசாமி, தென்காசி மாவட்டம் முருகேசன், கீழப்பத்தை பெருமாள் சன்னதி தெருவை சேர்ந்த ஹரி, கேரளா மாநிலத்தை சேர்ந்த அர்சத் என்பதும், மண்ணுளி பாம்பிற்கு ரூ 10 லட்சம் வரை பேரம் பேசியதும் அம்பலமானது.
இதையடுத்து கீழக்கருவேலங்குளத்தில் முத்துசாமிக்கு சொந்தமான தோட்டத்தில்
மறைத்து வைக்கப்பட்டிருந்த, 5 அடி நீளமுள்ள மண்ணுளி பாம்பை வனத்துறையினர்
பறிமுதல் செய்தனர். 6 பேரை கைது செய்து நாங்குநேரி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு,
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களிடமிருந்து கார், செல்போன்,
லேப்டாப் ஆகியவைகளும் கைப்பற்றப்பட்டது.
இதனிடையே தனிஷின் லேப்டாப்பை ஆய்வு செய்த போது, அதில் ஏராளமான மண்ணுளி
பாம்புகளில் போட்டோக்கள் இருந்துள்ளது. தொடர்ந்து, நடந்த விசாரணையில் தனீஷ்க்கு
வெளி மாநில கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பதும் வெளிவந்துள்ளது. எனவே, அவரது
செல்போனை வைத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்தும் விசாரணை
நடந்து வருகிறது.
கு. பாலமுருகன்