24 மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்றும் இன்றும் துப்பாக்கிச்…

ஜம்மு காஷ்மீரில் கடந்த 24மணி நேரத்தில் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே, காஷ்மீர் பள்ளத்தாக்கின் மூன்று வெவ்வேறு இடங்களில் நேற்றும் இன்றும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இது குறித்து செய்தியளர்களிடம் பேசிய ஐஜி விஜய் குமார், குப்வாராவில் நேற்று நடைபெற்ற தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 பாகிஸ்தானிய தீவிரவாதிகள் நேற்றே சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், ஒரு பாகிஸ்தானிய தீவிரவாதி இன்று காலை  சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷொகத் என்ற தீவிரவாதியும் இவர்களோடு சேர்ந்து சுட்டுக்கொல்லப்பட்டதாக அவர் கூறினார்.

புல்வாமாவில் நடைபெற்ற மற்றொரு தாக்குதலில் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவித்த ஐஜி விஜய் குமார், குல்காமில் நடைபெற்ற தாக்குதலில் ஒரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதியும், ஒரு ஜெய்ஷ் இ முகம்மது தீவிரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இதன்மூலம், கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குப்வாரா மற்றும் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதல்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்த விஜய் குமார், குல்காமில் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

கொல்லப்பட்ட 7 தீவிரவாதிகளில் 4 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.