கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து தைன்யர் பேருந்து ஒன்று, பயணிகளை ஏற்றிக்கொண்டு கோகர்ணாவுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் அதிகாலை சித்ரதுர்கா அருகே தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிர்புறம் வந்த லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலைக்கு நடுவில் இருந்த தடுப்புச்சுவரை தாண்டி சொகுசு பேருந்து மீது பயங்கரமாக மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் பேருந்து, லாரி இரண்டும் தீப்பிடித்து எறிந்துள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் சிக்கிய சிலர், படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







