கரகாட்டம், செண்டை மேளம், தோரணம்… பழனிசாமியை வரவேற்க அதிமுகவினர் ஏற்பாடு!

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி்ல எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து,  அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் காத்திருக்கின்றனர்.…

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தி்ல எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என முகப்பு பேனர் வைத்து,  அலுவலகம் வரவுள்ள கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க கட்சியினர் காத்திருக்கின்றனர்.

இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

அதிமுக தலைமை அலுவலகம் வரும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லத்திலிருந்தே உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தலைமை அலுவலக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்துகிறார். அதிமுக அலுவலகத்தில் ஜூலை 11 ஆம் தேதி நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்ட அறைகளையும் எடப்பாடி பழனிசாமி பார்வையிட உள்ளார்.

கரகாட்டம், செண்டை மேளம், தப்பாட்டம், பேண்ட் வாத்தியத்துடன் கூடிய தோரண வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

அதிமுக அலுவலகம் வரும் வழியான டிடிகே சாலை நெடுகிலும் தோரண வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்க வருகை தரும் எங்கள் சாமி எடப்பாடி பழனிச்சாமி என எம்ஜிஆர் மாளிகை நுழைவாயிலில் வாழை மரம், பலூன் அலங்காரத்துடன் முகப்பு பேனரும் வைக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.