கள்ளக்குறிச்சி கலவரத்தின் போது வன்முறையில் ஈடுபட்டவர்கள் பாக்கெட் சாராயங்களை கொண்டு பள்ளி வாகனம், போலீஸ் வாகனம் உள்ளிட்டவைகளுக்கு தீ வைத்த வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள கனியாமூர் என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி மர்மான முறையில் உயிரிழந்தார். இதையடுத்து மகளின் மரணத்திற்கு நீதிகேட்டு பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் வன்முறையாக மாறியதுடன் பள்ளி வாகனம் , மேஜை, நாற்காலி போன்ற பொருட்கள், சான்றிதழ் போன்றவைகளை தீயிட்டு எரித்தனர். மேலும் பொதுசொத்துக்களை சேதப்படுத்தி மிகப்பெரிய வன்முறையாக மாறியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பள்ளியின் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறைக்கு காரணமாக இருந்த 379 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 125 பேர் சிறையிலடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கக்பட்டுள்ளது.
மேலும், இன்று காலை சேலம் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு மாணவிக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த போவதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியானதையடுத்து மாவட்ட எல்லையில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், கனியாமூர் பள்ளி கலவரத்தின் போது நூற்றுக்கும் மேற்பட்ட பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் பஸ் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அனைவரிடத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.