‘ஜஸ்ட் ஸ்டாப் ஆயில்’ இயக்கத்தின் ஆர்வலர்கள் நேஷனல் கேலரியில் உள்ள உலகப்புகழ் பெற்ற ஓவியரான ‘வான் கோவின்’ சூரியகாந்தி ஓவியத்தின் மீது சூப்பை வீசினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரண்டு ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற சூழலியல் ஆர்வலர்கள், வின்சென்ட் வான் கோவின் சூரியகாந்தியின் தலைசிறந்த படைப்பின் மீது தக்காளி சூப்பை வீசினர். இதனால் கேலரிகள் சிறந்த கலைப் படைப்புகளுக்குப் பொதுமக்களின் அணுகலைக் கட்டுப்படுத்தும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் டி-ஷர்ட்களை வெளிப்படுத்த இந்த பெண் எதிர்ப்பாளர்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணியளவு, 1888 ஆண்டின் மிகப்பெரிய கலைப்படைப்பின் மீது சூப்பை எறிந்தனர். ஆனால் ஓவியம் கண்ணாடித் தாளால் பாதுகாப்பாக மூடப்பட்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக “பாதிக்கப்படவில்லை” என அருங்காட்சியகம் தெறிவித்ததொடு, ஓவியம் சுத்தம் செய்யப்பட்டு தற்போது மீண்டும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து சில மணிநேரங்களில் காலநிலை பிரச்சாரக் குழு ஸ்காட்லாந்து யார்ட்டை குறிவைத்தது வந்த ஆர்வலர்கள் கட்டிடத்திற்கு ஆரஞ்சு வண்ணத்தைத் தெளித்து,முழக்கங்களை எழுப்பினர். இதை அடுத்து 24 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர்.
பொதுக் காட்சியகங்களில் உள்ள உலகின் சிறந்த கலைப் படைப்புகளை இது போன்று தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதால், கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பல்வேறு கலை வரலாற்றாசிரியர்கள், ஆர்வலர்களும் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால் பார்வையாளர்களைத் தூரத்திலிருந்து ஓவியங்களைப் பார்க்கக் கட்டாயப்படுத்தப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.