திருப்பதியில் இலவச தரிசனம் செய்ய 24 மணி நேரம் ஆகிறதாம்! 3 கி.மீ தூர நீள வரிசையில் நிற்கும் பக்தர்கள்!!

திருப்பதி மலையில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆவதோடு 3 கி.மீ நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது இன்றும் நாளையும் வார விடுமுறை ஆகையால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம்…

திருப்பதி மலையில் இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆவதோடு 3 கி.மீ நீள வரிசையில் பக்தர்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

இன்றும் நாளையும் வார விடுமுறை ஆகையால் திருப்பதி மலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் இலவச தரிசனத்திற்காக 3 கி.மீ நீள வரிசையில் 24 மணி நேரம் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரித்து உள்ள காரணத்தால் திருப்பதி மலையில் உள்ள
வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இருக்கும் அனைத்து அறைகளிலும் பக்தர்கள் நிரம்பி உள்ளனர்.

திருப்பதியில் உள்ள இலவச தரிசன டோக்கன் கவுண்டர்களில் டோக்கன் வாங்காமல்
திருமலைக்கு சென்று வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் இடம் கிடைக்காத
பக்தர்கள் ஐந்து கிலோ மீட்டர் நீள வரிசையில் இலவச தரிசனத்திற்காக
காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்து வருகிறது.

300 ரூபாய் கட்டண தரிசனத்திற்கு 4 மணி நேரமும், இலவச தரிசன டோக்கன் வாங்கிய
பக்தர்கள் 5 மணி நேரமும் காத்திருந்தும் ஏழுமலையானை வழிபட்டு செல்கின்றனர்.
நேற்று ஒரு நாளில் கோவில் உண்டியலில் மூன்று கோடியே 58 லட்ச ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக சமர்ப்பித்துள்ளனர்  என தேவஸ்தான நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.