ஐபிஎல் போட்டி RCBvsRR : ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு

ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 172 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது…

ஐபிஎல் போட்டியில்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 172 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. 16-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 60-வது லீக் ஆட்டம்  ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு செய்தது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கினர்.

ஃபாப் டு பிளெசிஸ் அதிரடியாக ஆட்டத்தை துவங்கினார். இதனையடுத்து விராட் கோலி 18 ரன்களுக்கு ஆட்டமிழந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஃபாப் டு பிளெசிஸ் 44 பந்துகளில் 55 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.  இதன் பின்னர்  களமிறங்கிய  மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களை விளாசி 54 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குவித்தது. இதன் மூலம்  ராஜஸ்தான் அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது.

ராஜஸ்தான் அணி சார்பில் ஆடம் சாம்பா, கேஎம் ஆசிஃப் ஆகியோர்  இரண்டு விக்கெட்களை வீழ்த்தினர்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.