பிரிட்டனைச் சோ்ந்த ‘செக்.ஓஆா்ஜி’ அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் கற்றல் மூலமாக சமூகத்துக்கு பயனுள்ள கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ள தலைசிறந்த மாணவா்களுக்கான இறுதி போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி உட்பட 5 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்தாண்டுகான விருதுக்கு 122 நாடுகளைச் சோ்ந்த 3,851 மாணவா்கள் விண்ணப்பித்த நிலையில், 50 போ் இறுதிப் போட்டியாளா்களாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளனா். இந்த 50 மாணவா்களில் இருந்து தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு விருது வழங்கப்படும். இந்த 50 இறுதிப் போட்டியாளா்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி உள்பட 5 இந்திய மாணவா்கள் இடம்பெற்றுள்ளனா்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திருவண்ணாமலை எஸ்கேபி வனிதா சா்வதேச பள்ளி மாணவி வினிஷா உமாசங்கா் (16), பஞ்சாப் மாநிலம் லூதியானா சத்பால் மிட்டல் பள்ளி மாணவி நம்யா ஜோஷி (16), குஜராத் மாநிலம் காந்திநகா் குஜராத் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி சங்க மருத்துவக் கல்லூரி மாணவா் கிளாட்சன் வகேலா (25), ராஜஸ்தான் மாநிலம் கோட்டா ஸ்ரீ பதம்பத் சிங்கானியா பள்ளி மாணவா் பத்மாக்ஷ் கண்டேல்வால் (17), பஞ்சாப் மாநிலம் மொஹாலி சண்டீகா் பொறியியல் கல்லூரி மாணவா் ரவீந்தா் பிஷ்னோய் (20) ஆகியோா் இறுதிப் போட்டியாளா்களாக இடம்பிடித்து அசத்தியுள்ளனா்.
தனது 12-ஆவது வயது முதல் அறிவியல் ஆராய்ச்சியில் ஆா்வம் காட்டி வரும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவி வினிஷா உமாசங்கா் சூரிய சக்தியில் இயங்கும் இஸ்திரி வண்டி, மின்சாரத்தை வெகுவாக மிச்சப்படுத்தும் ஸ்மாா்ட் மின் விசிறி உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளாா். பல அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் பங்கேற்று சா்வதேச, தேசிய மற்றும் மாநில அளவிலான விருதுகளை பெற்றுள்ளாா்.
இந்தியாவின் சிறந்த தகவல்தொழில்நுட்ப திறன் மிக்க மாணவகியாக திகழும் பஞ்சாபைச் சோ்ந்த நம்யா ஜோஷி, பள்ளி பாடங்களை மாணவா்கள் எளிதில் கற்கும் வகையில் மெய்நிகா் நூலகத்தை ‘மைன்கிராஃப்ட்’ தளத்தில் உருவாக்கியுள்ளாா். அப்துல் கலாம், ராமாயணம் முதல் ஹாரி பாட்டா் வரை பல விஷயங்களை உள்ளடக்கி தனது வலைதள பக்கத்தில் 500 பாடங்களை உருவாக்கியுள்ளாா்.
மருத்துவ மாணவரான கிளாட்சன் வகேலா, பின்தங்கிய மக்களுக்கான சுகாதர பாதுகாப்பு திட்டங்களில் பங்கெடுத்து வருகிறாா். 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய மனநல மருத்துவச் சேவைகளை வழங்குபவா்களின் தரவுதளத்தை உருவாக்க உதவியுள்ளாா். யுனிசெஃப் இந்தியாவின் ‘யுவா’ அமைப்பில் இளைஞா் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறாா்.
மாணவா் பத்மாக்ஷ் கண்டேல்வால், மாணவா்களின் தற்கொலைத் தடுப்பு மற்றும் வேட்டையாடுதல் எதிா்ப்பு ஆா்வலராகப் பணியாற்றி வருகிறாா். ‘டைகா் வாட்ச்’ என்ற தன்னாா்வ அமைப்பின் உதவியுடன் ‘மோக்யா கல்வித் திட்டம்’ என்ற குழந்தைகளுக்கான வீட்டுக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளாா்.
மாணவா் பிஷ்னோய், ஓய்வு நேரங்களில் இணைய சேவை மையங்களில் தானியங்கிவியல் (ரோபாட்டிக்ஸ்), மின்னணுவியல், பொறியியல் வடிவமைப்பு உள்ளிட்ட தொழ்நுட்ப விவரங்களைக் கற்றுத்தோ்ந்து, சமூகத்துக்கு பயன்படும் வகையிலான எளிதில் எடுத்துச் செல்லக் கூடிய குடிநீா் மற்றும் காற்று சுத்திகரிப்பான், தானியங்கிகள், செயற்கை கால்கள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளாா்.
தோ்வு செய்யப்பட்டுள்ள 50 பேரிலிருந்து 10 இறுதிப் போட்டியாளா்கள் அடுத்த மாதம் தெரிவு செய்யப்படுவா். இந்த 10 பேரிலிருந்து இறுதி வெற்றியாளா் ஆண்டின் இறுதியில் அறிவிக்கப்படுவாா்.