இன்று அதிகாலை சர்வதேச அளவில் இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் பயனர்கள் கடும் அவதி அடைந்தனர்.
உலகளவில் கோடிக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். நேற்று 98,000-க்கும் மேற்பட்ட பயனர்களுக்கு இன்ஸ்டாகிராம் செயலியை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இது குறித்து செயலிழப்பு கண்காணிப்பு வலைத்தளம் வெளியிட்டுள்ள தகவலில், ”ஞாயிற்றுக்கிழமை மாலை இன்ஸ்டாகிராம் செயலியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களுக்கு சுமார் இரண்டு மணிநேரம் சேவைகள் தடைபட்டுள்ளது” என கூறியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம் சேவை முடங்கியுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர். இதே போல் மே 18 அன்று, இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியதாக உலக அளவில் புகார் எழுந்தது. பல பயனர்கள் தங்கள் கணக்கில் உள்நுழைய முடியவில்லை என புகார் அளித்திருந்தனர். அந்த வகையில் இது இரண்டாவது முறையாகும்.
இடையூறுகளால் பாதிக்கப்பட்ட பயனர்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. இதுகுறித்து செயலிழப்பு கண்காணிப்பு இணையதளத்தில் அமெரிக்காவில் 100,000 பயனர்களும், கனடாவில் 24,000க்கும் அதிகமான பயனர்களும், பிரிட்டனில் 56,000 பேர் மற்றும் இந்தியாவில் 9357 பேர் என ஒரு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் மூலம் கூறியதாவது,”சிலருக்கு இன்ஸ்டாகிராம் கணக்கில் உள்நுழைய இன்ஸ்டாகிராம் சேவை பாதிப்பை முடிந்தவரை விரைவாக செயல்பட்டு இயல்பு நிலைக்கு கொண்டு வர பணியாற்றி வருகிறோம். சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.