காற்று மாசுபாடு காரணமாக இந்தியர்கள் தங்களின் மொத்த ஆயுள் காலத்தில் 5.3 ஆண்டுகள் இழப்பதாக ஆய்வில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும், அதிக எண்ணிக்கையிலான மக்கள் மாசு செறிவுகளால் பாதிக்கப்படுகின்றனர். காற்று மாசுபாட்டால் இந்தியா மிகப்பெரிய சுகாதாரச் சுமையை எதிர்கொள்கிறது. 2013 முதல், உலகின் மாசு அதிகரிப்பில் 59.1% இந்தியாவில் இருந்து வந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரான டெல்லி 2021 ஆம் ஆண்டில் ஒரு கன மீட்டருக்கு 126.5 மைக்ரோகிராம் என்ற வருடாந்திர சராசரி துகள் மாசுபாட்டைப் பதிவு செய்துள்ளது, இது உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலை விட 25 மடங்கு அதிகமாகும், பெய்ஜிங்கில் ஆண்டு சராசரியாக ஒரு கன மீட்டருக்கு 37.2 மைக்ரோகிராம்கள் பதிவாகியுள்ளன. பெய்ஜிங் மாகாணம் மாசுபாட்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்து எட்டு ஆண்டுகளில் 56.2% குறைந்துள்ளது.
சீனாவின் மாசுபாடு கணிசமாகக் குறையவில்லை என்றால், 2013 முதல் 2021 வரை உலக சராசரி மாசுபாடு சற்று அதிகரித்திருக்கும். இந்தக் காற்றின் தர மேம்பாடுகள் காரணமாக, சீனக் குடிமகன் ஆயுட்காலம் 2.2 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கலாம்” என்று ஆய்வறிக்கை கூறியுள்ளது.
சீனா காற்று மாசுபாட்டின் அளவை குறைத்துள்ளது. ஆனால் இந்தியா தொடர்ந்து பின்தங்கிய நிலையில் உள்ளது. இதன் காரணமாக ஒரு சராசரி இந்திய குடிமகனின் ஆயுட்காலம் சுமார் 5.3 ஆண்டுகள் இழக்கிறது. ஆனால் 2013 இல் 4.7 ஆண்டுகள் ஆயுட்காலம் இழப்பை எதிர்கொண்ட சீனக் குடிமகன் தற்போது 2.2 ஆண்டுகளாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.