உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் போட்டியில், இந்திய வீராங்கனை அன்னு ராணி 7-வது இடத்தை பிடித்து வெளியேறினார்.
அமெரிக்காவில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீராங்கனை அன்னு ராணி நேற்று முன்தினம் இறுதி போட்டியில் பங்கேற்றார். அப்போது, அவர் அதிகமான தூரத்தை கடந்து இறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் பங்கேற்ற அவர், 61.12 மீட்டர் தூரம் மட்டுமே எட்டியதால் 7-வது இடத்தை பிடித்து வெளியேறினார். இந்தியாவின் தேசிய சாதனையாளரான அவர், இதுவரை 63.82 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாதனை படைத்துள்ளார்.
இந்நிலையில், உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அவரது சாதனை தூரத்தில் இருந்து 2 மீட்டர் குறைவாக எறிந்து 61.12 மீட்டர் தூரத்தை தொட்டுள்ளார். இருந்தபோதிலும் அவர் 7-வது இடம் பிடித்து பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
– இரா.நம்பிராஜன்