“மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்” – ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பேட்டி!

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4)…

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும்,  காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.  முதலில் தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டு அடுத்தடுத்த சுற்றுகளும் எண்ணப்படுகின்றன.

543 மக்களவை தொகுதிகளில் குஜராத் மாநிலம் சூரத் தொகுதி பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வான நிலையில் எஞ்சிய 542 இடங்களுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.  அதன்படி,  பாஜக கூட்டணி 294 இடங்களில் முன்னிலை வகிக்கும் நிலையில் இந்தியா கூட்டணி கட்சிகள் 232 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.  பின்னர் மற்ற கட்சிகள் 17 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில்,  மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதாஸ்ரா தெரிவித்துள்ளார்.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும்.  நரேந்திர மோடி பிரதமராவார் என்ற பேச்சுக்கே இடமில்லை.  இது மக்களின் ஆசீர்வாதம்.  பாஜக பொய்யர்களின் கட்சி”  என்று கோவிந்த் சிங் தோதாஸ்ரா கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.