33.3 C
Chennai
April 27, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம்: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே அறிவிப்பு

மஹாராஷ்டிராவில் வரும் 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் உள்ள பல்பொருள் அங்காடிகள், மளிகைக் கடைகள் ஆகியவற்றில் பழரசம் மூலம் தயாரிக்கப்படும் ஒயின் விற்பனை செய்ய, அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என அம்மாநில திறன் வளர்ச்சி துறை அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அண்மைச் செய்தி: நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் கடன் சுமை காரணமாக 16000 பேர் தற்கொலை.

இந்நிலையில், மகாராஷ்ட்ர அரசு தனது முடிவை கைவிட வலியுறுத்தி, முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு, சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கடிதம் எழுதி இருந்தார். அரசு தனது முடிவை திரும்ப பெறாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார். எனினும், அரசு தனது முடிவை கைவிடாததால், வரும் 14-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை, தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் மேற்கொள்ள இருப்பதாக அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading