கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னை, கரூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.
அப்போது வருமான வரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அது தொடர்பாக 58 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வருமான வரித்துறையினரின் சோதனை 8 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று மீண்டும் வருமான வரித்துறையினர் சோதனை தொடங்கியுள்ளனர். கரூர் ஈரோடு சாலையில் உள்ள அன்னை அடுக்குமாடிக்குடியிருப்பில் சக்தி மெஸ் கார்த்தியின் சீல் வைக்கப்பட்ட இல்லத்தில் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோதை நகர் அன்னை அப்பார்ட் மெண்ட் கார்த்திக், ரமேஷ் வீடுகளில் 10க்கும் மேற்ப்பட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை. நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.