உதயநிதி தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். சமூக ஊடகங்களிலும் உதயநிதியை கண்காணித்து கொண்டிருக்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் திராவிட மாடல் பயிற்சி பாசறை-2 மற்றும் திமுக இளைஞர் அணி செயலி தொடக்கவிழா நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதில் பங்கேற்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இளைஞர் அணியின் செயல்பாட்டை ஒவ்வொரு நாளும் கவனித்து வருகிறேன். 3 ஆண்டுகள் இளைஞரணி நிகழ்ச்சியில் நான் பங்கேற்கவில்லை என உதயநிதி குறிப்பிட்டார். மூன்றரை வருடங்களாக இளைஞரணி நிகழ்ச்சிக்கு என்னை ஏன் கூப்பிடவில்லை என தெரியவில்லை. உதயநிதி தந்தையாக மகிழ்ச்சி அடைகிறேன். தலைவனாக பெருமைப்படுகிறேன். சமூக ஊடகங்களிலும் உதயநிதியை கண்காணித்து கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி சிறப்பாக செயல்படுகிறார். திமுகவில் இருக்கக்கூடிய மற்ற அணிகளை விட இளைஞரணி முதல் அணியாக இருப்பது பாராட்டுக்குரியது. பாராளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு வெற்றியை தேடி தந்தார் உதயநிதி. உதயநிதி செங்கல் மூலம் மக்கள் மனதில் பல விஷயங்களை பதிவு செய்தார்.
இளைஞர் அணி மூலம் அறிக்கை வெளியிட்டு நீர் நிலைகளை சுத்தம் செய்ய உதயநிதி உத்தரவிட்டார். நீர் நிலைகளை சுத்தம் செய்யும் பணியையும் அவர் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்தி திணிப்பு, நீட் தேர்வு பிரச்னையில் இளைஞர் அணி பங்கேற்றதை எண்ணி மகிழ்கிறேன்.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது, ஆளுங்கட்சி செய்ய வேண்டிய வேலைகளை செய்தோம். நம்மை ஒழிக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு பிரச்சாரம் நடைபெறுகிறது. அதனை முறியடிக்க இளைஞரணியினரால் தான் முடியும். இளைஞரணிக்காக முரசொலியில் தலைமைக்கழகத்தின் அனுமதியுடன் ஒரு பக்கம் ஒதுக்கப்படுகின்றது. கோட்டையில் பணிகள் காத்திருக்கின்றது. விடுமுறை நாள் என்றாலும் செல்கிறேன் என்று கூறினார்.